Colombo (News 1st) இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் நேற்றிரவு(21) ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு(21) 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரத்மலானையை சேர்ந்த 40 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரை வௌியாகவில்லை.
சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.