Colombo (News 1st) நீர்கொழும்பு – சரக்குவ கடற்கரையில் உயிரிழந்த நிலையில் மேலும் இரண்டு கடலாமைகள் ஒதுங்கியுள்ளன.
இதற்கமைவாக, நாட்டின் மேற்கு கடற்பரப்பில் கடந்த சில நாட்களுக்குள் 17 கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
வௌ்ளவத்தையில் இருந்து காலி முகத்திடல் வரையிலான நீர்கொழும்பு கடற்கரையிலும் உயிரிழந்த நிலையில் கடலாமைகள் கரையொதுங்கியதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
8 கடலாமைகள் மீதான பிரேத பரிசோதனைகள் நேற்று (24) இடம்பெற்றதுடன், அது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.