Sangathy
News

50 என்ஜின்கள் பழுது: ரயில் போக்குவரத்து பாதிப்பு

Colombo (News 1st) 50 ரயில் என்ஜின்கள் பல்வேறு காரணங்களால் பழுதடைந்து காணப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டது.

இந்தியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட என்ஜின்கள் தொழில்நுட்பக் குறைபாடுகளால் பழுதடைந்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் M.J.இதிபொலகே தெரிவித்தார்.

நாளாந்தம் ரயில் போக்குவரத்திற்கு 75 என்ஜின்கள் தேவைப்படுகின்ற நிலையில், தற்போது 50 என்ஜின்களே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 20  என்ஜின்  இயந்திர தொகுதிகள்  சேவையில்  ஈடுபடவில்லை.

நாளாந்த ரயில் சேவைக்கு 90 இயந்திர தொகுதிகள் தேவையான நிலையில் தற்போது 70 என்ஜின் இயந்திர தொகுதிகளே சேவையில் ஈடுபடுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

வெள்ளவத்தை – ஃப்ரெட்ரிக்கா வீதியிலுள்ள மாடிக்குடியிருப்பிலிருந்து வீழ்ந்து இளைஞர் பலி

Lincoln

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை குறைப்பு

Lincoln

நளினியின் கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பில் 4 வாரங்களில் தீர்மானிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy