Sangathy
News

நீர்த்தொட்டிக்குள் தவறி வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

Colombo (News 1st) கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் பகுதியில் நீர்த்தொட்டிக்குள் வீழ்ந்து ஒன்றரை வயதான பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

இந்த அனர்த்தம் நேற்று முன்தினம்(29) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அயல் வீட்டு சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த நீர்த்தொட்டிக்குள் தவறி வீழ்ந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதிலும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் குழந்தையின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

Is Putin bluffing about nukes?

Lincoln

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் சில தினங்களில் வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம்

John David

Web Lankan wins GOLD

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy