Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்றும்(10) 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தென் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அவதானமாக செயற்பட வேண்டும் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.