Sangathy
News

வவுனியாவில் STF ஜீப் விபத்திற்குள்ளானதில் 2 கான்ஸ்டபிள்கள் உயிரிழப்பு

Colombo (News 1st) வவுனியா – வெளிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை(STF)  கான்ஸ்டபிள்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 07 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அதிரடிப் படையின் வீரர்கள் சிலரை ஏற்றிச்சென்ற ஜீப் வண்டியொன்று கால்நடையொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

மதவாச்சி மற்றும் குருணாகல் பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுகளை உடைய இருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த ஏனைய STF வீரர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

AAC delegates discuss road safety projects, etc., with State Minister

Lincoln

Shortage of 160 essential medicines

Lincoln

சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்விற்கு தயார் – அரசாங்கம் அறிவிப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy