Sangathy
News

திடீர் சுகவீனமடைந்த 38 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Colombo (News 1st) பண்டாரவளையிலுள்ள பாடசாலை ஒன்றின் 38 மாணவர்கள்
திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு விஷமடைந்தமையே இதற்கு காரணம் என நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் பண்டாரவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

சைபர் தாக்குதல் தொடர்பான விரிவான விசாரணை ஆரம்பம் – தொழில்நுட்ப அமைச்சு

Lincoln

Lanka’s poor surge by 4 Mn to 31-pct of population: Survey

Lincoln

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்ய விசேட தேடுதல் நடவடிக்கை

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy