Sangathy
News

3000 விவசாயிகளுக்கு உரம் வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை

Colombo (News 1st) இம்முறை பெரும்போகத்தில், 3 மாவட்டங்களில் மரக்கறி மற்றும் ஏனைய பயிர்களை செய்கையிடும் 3000 விவசாயிகளுக்கு உரங்களை வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கிணங்க, விவசாயி ஒருவருக்கு 20,000 ரூபா பெறுமதியான உரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கான நிதியுதவி தனியார் நிறுவனமொன்றினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் மாத்தளை, குருணாகல், மொனராகலை மாவட்டங்களில் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஒரு ஹெக்டெயருக்கு குறைவான நிலத்தில் காய்கறிகள் மற்றும் பிற பயிர்களை செய்கையிடும் விவசாயிகளுக்கே இவ்வாறு உரம் வழங்கப்படவுள்ளது.

Related posts

இஸ்ரேலில் என்ன நடக்கிறது; மக்கள் கிளர்ந்தெழுந்தது ஏன்?

Lincoln

வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை..!

Lincoln

வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி பச்சைக்கொடி – அமைச்சர் டக்ளஸ்!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy