Sangathy
News

பம்பலப்பிட்டியிலிருந்து கரையோரப் பாதை தற்காலிகமாக ஒரு வழி பயணம்

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தை அண்மித்து கரையோரப் பாதையின்  ஒரு பகுதியை இன்று(06) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வௌ்ளவத்தை முதல் கரையோர மார்க்கத்தின் கொள்ளுப்பிட்டி வரை பயணிக்கும் வாகனங்கள் பம்பலப்பிட்டி ரயில் நிலைய வீதியூடாக காலி வீதிக்கு சென்று காலி வீதியூடாக கொள்ளுப்பிட்டி வரை பயணிக்க முடியும்.

கொள்ளுப்பிட்டியிலிருந்து கரையோரப் பாதையில் வௌ்ளவத்தை வரை பயணிக்கும் வாகனங்கள் க்ளேன் ஆபர் பிளேஸில் திரும்பி காலி வீதிக்குச் சென்று டுப்ளிகேஷன் வீதியூடாக வௌ்ளவத்தை வரை செல்ல முடியும்.

மூடப்பட்டுள்ள பகுதியை தவிர்ந்து ஏனைய பகுதியில் இரு திசைகளிலும் வாகனங்கள் பயணிப்பதற்கான இயலுமை உள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

Minister indicates reduction in fuel prices in April

Lincoln

களனி பல்கலைக்கழகத்தின் 4 மாணவர்களுக்கு வகுப்புத் தடை

John David

CB eases monetary conditions by reducing its interest rates

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy