Sangathy
News

100 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் கைது

Colombo (News 1st) மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட இருவர் 100 இலட்சம் ரூபா இலஞ்சம் பெறும் சந்தர்ப்பத்தில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மண்ணெண்ணெய் சுத்திகரிப்புத் திட்டம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபை வழங்கும் வருடாந்த சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தை வெளியிடுவதற்காக அதிகார சபையின் தலைவர் இலஞ்சம் கோரியுள்ளார்.

இரண்டு இடைத்தரகர்கள் மூலம் பணத்தை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்திலேயே மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட இருவர் இன்று கைது செய்யப்பட்டதாக இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது.

சந்தேகநபர்கள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

Sirisena advises RW against rushing to implement 13A fully

Lincoln

உர விநியோகத்திற்கு பொறுப்பாகவிருந்த உயரதிகாரிகள் இருவரை இடமாற்றம் செய்ய விவசாய அமைச்சு தீர்மானம்

John David

பேர்லின் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஜெர்மனிக்கு விஜயம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy