Colombo (News 1st) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பிலிருந்து நுவரெலியா, ஹட்டன் உள்ளிட்ட நகரங்களுக்கு இந்த விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இன்று(12) மாலை முதல் குறித்த நகரங்களிலிருந்து மீண்டும் கொழும்பு நோக்கி இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.