Sangathy
News

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிரேக்க பிரதமருடன் கலந்துரையாடல்

Colombo (News 1st) துபாயில் நடைபெறும் COP 28 எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கிரேக்க பிரதமர் Kyriakos Mitsotakis சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் அரச தலைவர்கள், அரச தனியார் துறை பிரதிநிதிகள், சூழலியலாளர்கள், புத்திஜீவிகள் பங்கேற்பதுடன், இந்த மாநாடு எதிர்வரும் 12 ஆம் திகதி  நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

அபிவிருத்தி  அடைந்து வரும் நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மூன்று யோசனைகளை இந்த மாநாட்டில் இலங்கை முன்வைக்கவுள்ளது. 

Related posts

புத்தளம் களப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

John David

அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை கையளிக்குமாறு அறிவுறுத்தல்

John David

2023 முதல் காலாண்டில் இலங்கை முதலீட்டுச் சபைக்கு 211 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் கிடைத்துள்ளன

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy