Colombo (News 1st) இம்மாத நடுப்பகுதியில் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) நிறைவேற்றுக் குழுவில் இரண்டாவது கடன் தவணைக்கான அனுமதி கிடைக்கலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.