Sangathy
News

வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற 104 பேர் கைது!

வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கைதிகள் சிலர் நேற்று (11) தப்பிச்சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

இதன்படி 140 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், 104 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நீண்டகாலமாக போதைக்கு அடிமையானவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு அனுப்பப்பட்டுள்ள சிலரே தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேர் கைது

Lincoln

SJB protest in Colombo today

Lincoln

செய்யறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy