Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்துடன்(IMF) முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் போது பொறுப்புடன் செயற்படுமாறு, அனைத்து அரசியல் தலைவர்களிடமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கண்டி மாநகர சபையின் “கரலிய அரங்கம்” மற்றும் கலைக்கூடம் என்பவற்றை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இன்று(17) கலந்து கொண்டார்.
கண்டி மாநகர சபையினால் 2018 ஆம் ஆண்டு இதற்கான நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதற்காக மாநகர சபையினால் 600 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.