Sangathy
News

Shakthi CROWN : மட்டக்களப்பில் இன்று(15) முதற்கட்ட குரல் தேர்வு

Colombo (News 1st) Shakthi CROWN ரியாலிட்டி இசை நிகழ்ச்சியின் குரல் தேர்வு இன்று(15) மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் காலை 9 மணி முதல் 4 மணி வரை குரல் தேர்வு நடைபெறவுள்ளது.

15 வயதுக்கு மேற்பட்ட பாடும் திறமையுடைய அனைவருக்கும் இதில் கலந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களின் குரலை சர்வதேசத்திற்கு எடுத்துச்செல்லும் நாட்டின் தனித்துவமான Shakthi CROWN ரியாலிட்டி இசை நிகழ்ச்சியின் முதற்கட்ட குரல் தேர்வு திருகோணமலையில் நேற்று(14) நடைபெற்றது

திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற குரல் தேர்வில் ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

Related posts

Bulgaria anti-government protesters take to streets for eighth day

Lincoln

COPE raises LRC’s failure to collect Rs 2 bn, lawyer drawing two salaries

Lincoln

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று(26) முதல் ஆரம்பம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy