Colombo (News 1st) சர்வதேச சிறுவர் புற்றுநோய் தினம் இன்றாகும்(15).
இலங்கையில் வருடாந்தம் 37,000 முதல் 40,000 வரையான புதிய புற்றுநோயாளர்கள் பதிவாகுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
புதிதாகப் பதிவாகும் புற்றுநோயாளர்களில் 2 முதல் 5 வீதமானவர்கள் சிறுவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.