Colombo (News 1st) மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெனியன் நீர்த்தேக்கத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீன் பிடிப்பதற்காக சென்ற தமது கணவர் வீடு திரும்பாமை தொடர்பில் மனைவியால் பொலிஸில் நேற்று (16) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹப்புகஸ்தென்னவை சேர்ந்த 35 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.