Sangathy
News

தலைமன்னாரில் சிறுமி கொலை: ஐவரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன

Colombo (News 1st) தலைமன்னார் – ஊர்மனை கிராமத்தில் 10 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 07 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி K.L.M. சாஜித் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சிறுமியின் உறவினர்கள் மற்றும் சிறுமியின் சடலத்தை முதலில் கண்டவர் உள்ளிட்ட ஐவரின்  சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

இந்த வழக்கில் சிறுமி சார்பாக மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் ஆஜராகி இருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த மாதம் 15 ஆம் திகதி மாலை காணாமற்போன 10  வயதான சிறுமியின் சடலம், சிறுமி தங்கியிருந்த அம்மம்மாவின் வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள  தென்னந்தோப்பிலிருந்து கடந்த 16 ஆம் திகதி காலை கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதியானது.

Related posts

Indian stocks slump on global monetary policy tightening; Rupee at new low

Lincoln

Top US doctor Fauci cautiously optimistic on having Covid vaccine by early 2021

Lincoln

Colombo (News 1st) 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை நாளை(04) நள்ளிரவு முதல் சுமார் 1,000 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy