Sangathy
Srilanka

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்..!

வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் அரங்கேறிய அராஜகங்களை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

நேற்று (19) மதியம் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரும் கலந்துகொண்டிருந்தனர்.

மாணவர்களின் போராட்டம் காரணமாக இராமநாதன் வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், வெடுக்குநாறி எங்கள் சொத்து, மயிலத்தமடு எங்கள் சொத்து, திட்டமிட்ட கைதுகளை நிறுத்து, சிங்கள பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்து, தையிட்டி எங்கள் சொத்து, நீராவியடி எங்கள் சொத்து, குருந்தூர்மலை எங்கள் சொத்து, மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா? உள்ளிட்ட பல கோசங்கலை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிரடியாக ரத்துச் செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்..!

Lincoln

முழுமையாக எரிந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு..!

tharshi

இருவேறு பகுதிகளில் இரண்டு சடலங்கள் கண்டுபிடிப்பு..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy