பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று (03) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்று முதல் மூன்று நாள் செயலமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வரை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்த செயலமர்வு நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.