Sangathy
Srilanka

தனிப்பட்ட தகராறில் ஒருவர் படுகொலை : நால்வர் கைது..!

34 வயதுடைய காலி தங்கெதர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி, தங்கேதர டிடிஸ் வத்த பிரதேசத்தில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்பு..!

tharshi

சொந்த மகளை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்த கேவலமான தாய் கைது..!

Lincoln

தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிராக போராட்டம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy