நடிகர் பிரசாந்துக்கு விரைவில் மறுமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரசாந்துக்கு மனைவியாக வரப் போவது யார் என்பது குறித்து தெரிய வந்திருக்கிறது. பிரசாந்துக்கு நல்லது நடந்தால் சரி என்கிறார்கள் ரசிகர்கள்.
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தார் பிரசாந்த். டாப் ஸ்டார் என அழைக்கப்பட்ட பிரசாந்துக்கு ஏகப்பட்ட ரசிகைகள் இருந்தார்கள்.
தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தான் கடந்த 2005ம் ஆண்டு பிரசாந்துக்கும், கிரஹலட்சுமி என்பவருக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். திருமணமாகி மூன்று ஆண்டுகள் கழித்து பிரசாந்தும், கிரஹலட்சுமியும் விவாகரத்து பெற்றார்கள்.
மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரசாந்தால் கெரியரில் கவனம் செலுத்த முடியாமல் போனது. இதையடுத்து ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போனார் பிரசாந்த்.
அவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்து வருகிறார். பிரசாந்துக்கு வெயிட்டான கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.
மேலும் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் பிரசாந்த். அந்த படத்தின் ரிலீஸ் எப்பொழுது என்று தான் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். அந்தகன் படத்தில் கொடூர வில்லியாக நடித்திருக்கிறார் சிம்ரன். பிரசாந்துக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்திருக்கிறார்.
பிரசாந்தின் கெரியர் தற்போது சரியாகி வரும் நேரத்தில் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார் அப்பா தியாகராஜன் என்று கூறப்படுகிறது. மீண்டும் திருமணம் செய்து வைப்பது தவறு இல்லை. ஆனால் இத்தனை ஆண்டுகளாக ஏன் செய்து வைக்கவில்லை என தியாகராஜனிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பிரசாந்துக்கு சொந்தக்காரப் பெண்ணை தான் திருமணம் செய்து வைக்கப் போகிறார்களாம். இந்த திருமணமாவது பிரசாந்துக்கு நல்லபடியாக நிலைக்க வேண்டும். தற்போது தான் மனிதரை சிரித்த முகமாக பார்க்க முடிகிறது. மறுபடியும் அவர் காணாமல் போய்விடக் கூடாது என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.
இதற்கிடையே ஏப்ரல் 6ம் தேதி தன் பிறந்தநாளை கொண்டாடினார் பிரசாந்த். அவருக்கு ரூ. 1.60 கோடி மதிப்புள்ள பி.எம்.டபுள்யூ. காரை பரிசாக அளித்தார் அப்பா தியாகராஜன். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது.