Sangathy
India

6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 11 வயது சிறுவன் : தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமி..!

உத்திர பிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்திருக்கிறான் நான்காம் வகுப்பு சிறுவன். மகளின் நிலையை பார்த்து பதறிய பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள். இப்போது சிறுமிக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.

உத்தர பிரதேஷ் மாநிலத்தில் இருக்கும் ஆக்ரா பகுதியில் ஆறு வயது சிறுமியை 11 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை அன்று நடந்திருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுமி தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நான்காம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பாதிக்கபட்ட சிறுமி மருத்துவமனையில் ஆனுமதிக்கபட்டு இருப்பதால் போலீசாரால் அவரிடம் இருந்து வாக்குமூலம் பெறமுடியவில்லை. ஆனாலும் இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கிறார். அதில் டியூஷனுக்கு சென்று வரும்போது இந்த சிறுவன் பாதிக்கபட்ட சிறுமியை தனியாக அழைத்து சென்று கற்பழித்ததாக கூறியுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறிய போது,

“என்னுடைய மகள் மாலை 7:30 மணி அளவில் வீட்டிற்கு வந்தார்.. அப்போது அவருக்கு ரத்தம் வழிந்தோடியது.. அவள் எப்படியோ முயற்சி செய்து நடந்ததை எங்களிடம் தெரியப்படுத்தினாள். அவளுக்கு தன்னை இந்த நிலைமைக்கு ஆக்கிய சிறுவனையும் தெரிந்திருக்கிறது.. உடனே எங்களது மகளை நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.. பிறகு சிறுவனின் வீட்டிற்கு சென்று அவரை போலீசாரிடம் அழைத்துச் சென்றோம்” என கூறி இருக்கிறார்.

தற்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரம் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நான்காம் வகுப்பு மாணவன் ஜுவினைல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார். மேலும் சிறுமியின் மருத்துவ பரிசோதனை கற்பழிப்பை உறுதி செய்திருக்கிறது என அப்பகுதி காவல்துறை துணை ஆணையர் சுகன்யா சர்மா கூறியிருக்கிறார்.

இந்த விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்க கிராம அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கடந்த திங்களன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் சிறுவன்மீது போக்சோ சட்டம் மூலமாக வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் டிசிபி தெரிவித்து இருக்கிறார். நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின்னர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

825 கோடி ரூபாய் செலவில் சேலா சுரங்கப்பாதை : உலகிலேயே இதுதான் ரொம்ப நீளம்..!

Lincoln

படகு கவிழ்ந்து சிறுவர்கள் உட்பட பலர் மாயம்..!

tharshi

மதுபானம் கொடுத்து மயக்கி பள்ளி மாணவிகள் பலாத்காரம் : இன்ஸ்டாகிராமில் பழகி ஏமாற்றிய வாலிபர்கள் கைது..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy