Sangathy
World Politics

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் : 17 பேர் உயிரிழப்பு..!

உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பு 2 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் நேற்று, ரஷ்யாவின் 3 ஏவுகணைகள் உக்ரைனின் செர்னிகிவ் நகர் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியதில், பொதுமக்களில் 17 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில், 3 குழந்தைகள் உட்பட 60 பேர் காயமடைந்தனர்.

மேலும், தாக்குதலில் 8 அடுக்குமாடிகளை கொண்ட ஹோட்டல் உட்பட 10க்கும் மேற்பட்ட கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.

பெலாரஸ் நாட்டின் எல்லையையொட்டிய செர்னிகிவ் பகுதியில், ரஷ்ய படையெடுப்பின்போது தொடக்கத்தில், படையினர் ஆக்கிரமித்தபோதும், பின்னர் 2 ஆண்டுகளாக அந்த பகுதியில் மோதல் நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரேசிலில் கடும் புயல் : 10 பேர் உயிரிழப்பு..!

tharshi

உக்ரைனுக்கு படைகளை அனுப்ப முன்வந்தால்… பிரான்ஸ் மந்திரியிடம் எச்சரித்த ரஷியா..!

tharshi

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் பலி..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy