Colombo (News 1st) இன்று (01) முதல் அமுலாகும் வகையில், தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான செல்லுபடிக் காலம் இரண்டு வருடங்களுக்கு நீடிகப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்த வருடத்தின் மார்ச் 31 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை விநியோகிக்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள், விநியோகிக்கப்பட்ட திகதியிலிருந்து 02 வருடங்களுக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.