Colombo (News 1st) 328 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்று (20) நள்ளிரவுடன் நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் பொருட்களின் விபரங்களை அவர் அறிவிக்கவில்லை.
எனினும், இந்த பட்டியலில் பழ வகைகள், மரக்கறி, வாகன உதிரிப் பாகங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், மின்சாதனப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் அடங்குவதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் போது, பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளால் 1. 7 பில்லியன் டொலர் சேமிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்திற்கு அறியத்தந்திருந்தார்.
You must be logged in to post a comment.