Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கசகஸ்தான் ஜனாதிபதி Kassym-Jomart Tokayev-க்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஆரம்பமாகியுள்ள உலகளாவிய பெர்லின் கலந்துரையாடலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்குபற்றிய போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 2024 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள அஸ்தானா சர்வதேச மாநாட்டில் (Astana International Forum) கலந்துகொள்ளுமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கசகஸ்தான் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
You must be logged in to post a comment.