Sangathy
News

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த 25 இந்திய மீனவர்கள் கைது

Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 25 இந்திய மீனவர்கள் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர். 

இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையிலான கடற்பரப்பில் 03 படகுகளுடன் குறித்த 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த குறித்த மீனவர்கள், தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். 

Related posts

Move to conduct all Law College exams in English medium defeated

Lincoln

PM Modi’s home state Gujarat votes in key regional election

Lincoln

அனர்த்தங்களின் போது பயிர்ச்செய்கை பாதிப்புக்களை அறிக்கையிடுமாறு வடக்கு ஆளுநர் பணிப்பு!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy