Sangathy
News

காஸாவில் சிறைப்பட்டிருந்த 11 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

காஸாவில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

கட்டார் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மூலம் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

2 குடும்பங்களைச் சேர்ந்த 2 பெண்களும் 09 குழந்தைகளும் நாடுதிரும்பியவர்களில் உள்ளடங்குவதாக  பலஸ்தீனத்திலுள்ள இலங்கை பிரதிநிதி அலுவலக பிரதானி பேர்னாட் குரே தெரிவித்தார்.

இதேவேளை, காஸா வட பகுதியிலுள்ள தேவாலயமொன்றில் மேலும் 4 இலங்கையர்கள் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 06 இலங்கையர்கள் பலஸ்தீனத்திற்குட்பட்ட பகுதியில் தங்கியுள்ளதாகவும் பலஸ்தீனத்திலுள்ள இலங்கை பிரதிநிதி அலுவலக பிரதானி குறிப்பிட்டார்.

Related posts

Six Lankan youth held under slave like conditions rescued from desert farm in Kuwait

Lincoln

தூத்துக்குடியில் இருந்து காங்கேசன்துறைக்கு விரைவில் பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து

John David

சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy