Sangathy
News

டெல்லியில் செயற்கை மழை திட்டத்தை முன்னெடுப்பது குறித்து பரிசீலனை

Colombo (News 1st) டெல்லியில் வளிமாசு அதிகரித்துவரும் நிலையில், வளி மாசை கட்டுப்படுத்தும் நோக்கில் செயற்கை மழை திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக டெல்லியின் சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை அமுல்படுத்த உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் அவ்வாறு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் வானிலையை கருத்திற்கொண்டு இந்த திட்டமானது இம்மாத இறுதியில் முன்னெடுக்கப்படலாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

டெல்லியில் தொடர்ச்சியாக வளிமாசு அதிகரித்துவரும் நிலையில் செயற்கை மழை திட்டத்திற்காக பரிந்துரை செய்யப்படுவது இது முதற்தடவை அல்ல. எனினும், இது சிக்கலான விடயம் எனவும் நீண்ட கால சுற்றுச்சூழல் தாக்கத்தை புரிந்துகொள்ள ஆராய்ச்சி தேவை எனவும் வல்லுநர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

Related posts

கட்புலனற்றோருக்கு விசேட வாக்குச் சீட்டுகள் – தேர்தல்கள் ஆணைக்குழு

John David

இந்திய ஹோட்டல்களில் தீப்பரவல்..!

Lincoln

உலகிலேயே மிகப்பெரிய சிறுநீரகக் கல்லை அகற்றி இலங்கை வைத்தியர்கள் உலக சாதனை

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy