Sangathy
News

யாழில். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் யாழ். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடாத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நிகழ்வு நேற்றைய தினம் (06) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனும், சிறப்பு விருந்தினர்களாக சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் செல்வி அகல்யா செகராசா, தினகரன் நாளிதழின் பிரதம ஆசிரியர் திரு.செந்தில் வேலவர், கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் திரு.சிவகெங்காதரன், சங்கவி பிலிம்ஸ் & சங்கவி தியேட்டர் பணிப்பாளர் திரு.Dr.துரைராசா சுரேஸ், வட மாகாண கைத்தொழில் அபிவிருத்தி சங்கத் தலைவர் திரு. தம்பிராசா சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

இதில், மாற்றுத் திறனாளிகளின் நடனம், கவிதை, பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும், சுயதொழில் முயற்சியாளர்களின் கௌரவிப்புகளும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனுஷ்க குணதிலக்க மீதான 3 குற்றச்சாட்டுகள் வாபஸ்

Lincoln

வத்தளையில் ஹோட்டல் முகாமையாளர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை

John David

வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடி; 2148 முறைப்பாடுகள் பதிவு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy