Colombo (News 1st) உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் 380 ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக தமது சேவைகளை முன்னெடுத்துச் செல்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழியர் பற்றாக்குறை தொடர்பில் நிதி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக குறித்த அதிகாரி கூறினார்.
உதவி ஆணையாளர்கள் 221 பேருக்கும் அலுவலக உதவியாளர்கள் 71 பேருக்கும் முகாமைத்துவ ஊழியர்கள் 88 பேருக்கும் வெற்றிடங்கள் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.