2024 வரவு செலவுத் திட்டத்திற்கு அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அனுமதி

Colombo (News 1st) 2024 வரவு செலவுத் திட்டத்திற்கு அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை (13) சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு அமைவாக தேவைப்படும் நிதியை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் அன்றைய தினம் தௌிவுபடுத்துவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இருவரின் வரவு செலவுத் திட்ட உரைகளின் அடிப்படையில், 3900 பில்லியன் ரூபா நிதியை பெற்றுக்கொள்ள தமது தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles