மிரட்டி பார்க்கும் சீனா : இந்திய எல்லைக்கு வந்த பயங்கர போர் விமானங்கள்

இந்திய எல்லைக்கு மிக அருகே சீனா தனது பயங்கர போர் விமானங்களை நிறுத்தி ஆங்காங்கே பறந்து வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிடம் தொடர்ந்து வம்பிழுத்து வரும் சீனா, தற்போது அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது. இந்திய எல்லைக்கு மிக அருகே சீனாவின் படுபயங்கர போர் விமானங்களை அந்நாடு தயார் நிலையில் வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சீன எல்லைக்கு மிக அருகில் இந்தியா தனது அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை நிறுத்தி, எதற்கு தயார் என்ற சமிக்ஞையை கொடுத்துள்ளது.

ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளையும் அடக்கி ஆள துடிக்கிறது சீனா. இதற்கு ஒத்துவராத நாடுகளை மிரட்டியும், பணம் கொடுத்தும் தனது கைப்பாவையாக சீனா மாற்றி வருகிறது. ஆனால், சீனாவின் இந்த அடாவடிக்கு எல்லாம் சற்றும் அசைந்து கொடுத்த ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது. இதனால் இந்தியாவை தொடர்ந்து சீண்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் சீனா, நமது அருணாச்சல பிரதேசம், லடாக் ஆகிய மாநிலங்களை ஆக்கிரமிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

ஆனால், இந்த எண்ணத்துடன் சீனா எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும், பத்து மடங்கு பதிலடியை இந்தியா கொடுத்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்திலும், லடாக்கிலும் இந்திய ராணுவத்தினரிடம் வெறும் கைகளால் அடி வாங்கி உயிரை காப்பாற்ற சீன ராணுவத்தினர் ஓடிய வீடியோ இன்னும் இணையத்தில் இருக்கின்றன. இது சர்வதேச அளவில் சீனாவுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, ஏதாவது சந்தர்ப்பம் கிடைத்தால் இந்தியா மீது அதிரடி தாக்குதலை நடத்த சீனா நேரம் பார்த்து காத்துள்ளது. இந்த சூழலில்தான், இந்திய எல்லைக்கு மிக அருகே, சிக்கிம் பகுதியையொட்டி உள்ள திபெத்தின் சிகாட் சேவ் பகுதியில் தனது அதிபயங்கரமான ஜே 20 போர் விமானங்களை சீனா நிறுத்தியுள்ளது. இங்கிருந்து வெறும் 200 கி.மீ. தொலைவில்தான் இந்தியா இருக்கிறது. இதனிடையே, இன்று காலை முதலாக அந்த போர் விமானங்கள் கடும் இரைச்சலுடன் பறந்து வருகின்றன. இதனால் சீன – இந்திய எல்லையில் நேற்று முதலாகவே கடும் போர் பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில், சீனா ஒருவேளை அசம்பாவிதமாக ஏதேனும் முடிவெடுத்தால், அதற்கு திருப்பி பதிலடி கொடுக்கும் வகையில் அதநவீன ரஃபேர் போர் விமானங்களை சீன எல்லைக்கு அருகே நிறுத்தியுள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்ற சூழல் எல்லைப் பகுதியில் நிலவி வருகிறது.

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles