பிரித்தானிய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் அளவை கடுமையான (Severe) நிலைக்கு உயர்த்தியதைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகம் (US Embassy London), பிரித்தானியாவில் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொது இடங்களில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறும் , பாடசாலைகள், தேவாலயங்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் போக்குவரத்து மையங்கள் போன்ற கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பயணிக்கும் நேரங்களையும் வழித்தடங்களை மாற்றிக் கொள்ளவும், தங்களை எளிதில் அடையாளம் காண முடியாத வகையில் நடந்து கொள்ளவும் குடிமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் உள்நாட்டு உளவு அமைப்பான எம்.ஐ.5 (MI5), கூட்டுப் பயங்கரவாத பகுப்பாய்வு மையம் (Joint Terrorism Analysis Centre) தேசிய அச்சுறுத்தல் அளவை “கணிசமான” (Substantial) நிலையிலிருந்து “கடுமையான” நிலைக்கு உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது இரண்டாவது மிக உயர்ந்த பாதுகாப்பு நிலையாகும். அடுத்த ஆறு மாதங்களுக்குள் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு அதிகம் இருப்பதை இது குறிக்கிறது.
லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் இரண்டு யூதர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு இந்த மாற்றம் செய்யப்பட்டாலும், அது அந்தச் சம்பவத்திற்கான பதில் மட்டும் அல்ல என்றும் எம்.ஐ.5 தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் கடந்த சில காலமாக படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
