கே.எல்.ஐ.ஏ 2 விமான நிலைய முனையத்தில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதால், சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் நேற்று தவறி விழுந்து உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் சுமார் 2.20 மணியளவில் முனையத்தின் 3ஆம் தளத்தில் உள்ள பசுமை மண்டலத்தில் நிகழ்ந்ததாகவும், அங்கு அப்பெண் ஒரு பால்கனி பகுதிக்கு வெளியே அமர்ந்து அழுதுகொண்டும் ஆக்ரோஷமாக நடந்துகொண்டும் காணப்பட்டதாகவும் சிப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் எம். ரவி தெரிவித்தார்.
பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை அமைதிப்படுத்த முயன்றதாகவும், ஆனால் அவர் மேலும் மேலும் பதற்றமடைந்து, அவருக்கு உதவுவதற்கான முயற்சிகளை எதிர்த்ததாகவும் அவர் கூறினார்.
மேலும் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சியில், ஒரு பாதுகாப்பு அதிகாரி அப்பெண்ணை அணுக முயன்றார், ஆனால் அவர் போராடி, பின்னர் கே.எல்.ஐ.ஏ 2 விமான நிலையத்தின் சரக்கு ஏற்றும் பகுதிக்குள் விழுந்தார், என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவப் பணியாளர்கள், அப்பெண்ணுக்கு அவசர சிகிச்சை அளித்த பின்னர், மேலதிக சிகிச்சைக்காக புத்ராஜயா மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
புத்ராஜயா மருத்துவமனையில் உள்ள மருத்துவ அதிகாரிகளால் மாலை சுமார் 5.09 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார் என்று அவர் தெரிவித்தார்.
