தற்போதைய நிலவரப்படி தவெக 104, அதிமுக 77, திமுக 52 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது.
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு எண்ணப்பட தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி தவெக: 100, அதிமுக: 80, திமுக: 53 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. முன்னிலை நிலவரப்படி அதிமுக 2-ம் இடத்திலும், திமுக 3-ம் இடத்திலும் இருக்கின்றன.
இதேவேளை, 104 தொகுதிகளில் தவெக கட்சி முன்னிலையில் உள்ள நிலையில் விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்க பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
