எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வரை மின்சார கட்டணங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாது என்று வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவது எரிபொருள் விலையில் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்துகிறது. எனினும், அதனை அடிப்படையாகக் கொண்டு மின்சாரக் கட்டணங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட மாட்டாது. செப்ரெம்பர் வரை மின்சார கட்டணத்தில் திருத்தங்கள் இல்லை – என்றார்.
