சிறுவர்கள் துன்புறுத்தலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை அரசாங்கம் ஒருபோதும் பாதுகாக்காது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஒருவர் எந்தத் தொழிலைப் புரிபவராக இருந்தாலும் அவர் குற்றமிழைத்திருந்தால் உரிய விசாரணைகளின் பிரகாரம் அவர் நீதியின் முன் நிறுத்தப்படுவார் – என்றும் அவர் கூறியுள்ளார்.
