வெனிசுலா தலைநகர் கராகஸ் அருகே அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதன் அதிர்வுகள் கொலம்பியாவிலும் உணரப்பட்டுள்ளன.
மொன்டால்பன் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.1 13.2 கிலோமீட்டர் (8.2 மைல்கள்) ஆழமாகவும் மற்றைய நிலநடுக்கம் 7.5 ரிக்டர் ஆகவும், பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
கராகஸில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே நிலநடுக்கத்தை தொடர்ந்து வெனிசுலா, அருபா மற்றும் பொனாயர் ஆகிய நாடுகளுக்கு சுனாமி அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
