மேற்கு ஐரோப்பாவை உலுக்கிய வெப்பநிலை தற்போது கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளால் ஜெர்மனியில் கடும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இன்றைய தினம் 40 டிகிரி செல்சியஸுக்கும் (104 டிகிரி ஃபாரன்ஹீட்) அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெர்மனியில் வாழும் மக்கள் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வெப்பநிலை 36°C ஆக இருக்கும் என்றும், சில இடங்களில் அதிகபட்சமாக 42°C வரை உயரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் நீரேற்றத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தினாலேயே இந்த வெப்ப அலை ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த காலநிலை மாற்றத்தால், இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இந்த வார இரவு நேர வெப்பநிலை 100 மடங்கு அதிகமாக இருப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
