பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் இன்று பேருந்தொன்று பள்ளத்தாக்கில் கவிழந்து விபத்துக்குள்ளானது.
இதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பேருந்து, மாகாணத் தலைநகரான குவெட்டாவிலிருந்து தேசியத் தலைநகரான இஸ்லாமாபாத்திற்குச் சென்று கொண்டிருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் 48 பயணிகள் இருந்ததனர் எனக் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
