கொமெய்னிக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஈரானில் குவிந்த சர்வதேச தலைவர்கள்

ஈரானின் உச்ச தலைவர் என அறியப்படும் அயதுல்லா அலி கொமெய்னியின் இறுதிச் சடங்கில் சர்வதேச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பலர் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் திரண்டுள்ளனர் என சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.

அலி கொமெய்னியின் உடல், தெஹ்ரானில் உள்ள பெரிய மசல்லா மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு வார கால அரசு முறை இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் அரச செய்தி நிறுவனம் IRIB வெளியிட்டதாக கூறப்படும் தகவலின்படி, 100இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் ஷெரீப், தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோலி ரெங்மோன், ஆர்மீனியா பிரதமர் நிஹோல் பிஸியன் மற்றும் ஜோர்ஜியா ஜனாதிபதி மிஹில் கவிலாஷ்வி ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், துருக்கியின் துணை ஜனாதிபதி, ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமித்ரி மெத்விடேவ், சீன தேசிய மக்கள் காங்கிரஸ் நிலை குழு துணைத் தலைவர் He Wei, ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் பாராளுமன்ற சபாநாயகர் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூபு் ஹக்கீம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனுடன், ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிராந்தியத்தில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் நடைபெறும் இந்த நிகழ்வு, உலக அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles