உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டதா ஜோர்ஜியா? புறக்கணித்த நேட்டோ நாடுகள்

துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டிற்கு ஜோர்ஜிய அரசாங்கம் அழைக்கப்படாததால் அந்நாடு சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கூட்டணியின் நிகழ்ச்சி நிரலிலிருந்து ஒரு முக்கிய கூட்டாளி நாடு விலக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

முந்தைய உச்சிமாநாடுகளைப் போலவே, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நேட்டோ கூட்டாளி நாடுகளும், உக்ரைனும் பிராந்தியப் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள அங்காராவிற்கு அழைக்கப்பட்டன.

ஆனால், முதல் முறையாக, நேட்டோவின் முன்னாள் முக்கிய கூட்டாளியான ஜோர்ஜியா, அதிகாரப்பூர்வ உச்சிமாநாட்டு நிகழ்ச்சி நிரலிலோ அல்லது அதனுடன் இணைந்த மன்றங்களிலோ இடம்பெறவில்லை.

கடந்த பத்தாண்டுகளில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ மீதான தனது அணுகுமுறையை ஜோர்ஜியா தொடர்ந்து தேசிய உத்திகளாக அறிவித்து வந்துள்ளது.

ஆனால் இந்த முறை, கூட்டணியின் நிகழ்ச்சி நிரலில் திபிலிசி இடம்பெறாதது, அந்நாடு தனது அரசியல் செல்வாக்கையோ அல்லது முக்கியத்துவத்தையோ இழந்துவிட்டதா என்பது குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜோர்ஜிய அதிகாரிகள் அங்காராவில் நடைபெறும் உச்சிமாநாடு, கடந்த காலங்களில் இடம்பெற்ற கூட்டங்களைப் போன்றதல்ல என்றும், அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles