ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

தான் படுகொலை செய்யப்படும் பட்சத்தில், ஈரான் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்களைப் பல மடங்கு தீவிரப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களைத் தான் விடுத்துள்ளார் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தன்னைக் கொலை செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டி வருவதாக இஸ்ரேல் தன்னிடம் எச்சரித்ததாக வெளியான செய்திகளுக்குப் பிறகு, ‘நியூயார்க் போஸ்ட்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியின் போதே டிரம்ப் இதனைத் தெரிவித்தார்.

“நான் நீண்ட காலமாகவே அவர்களின் இலக்குப்பட்டியலில் இருந்து வருகிறேன்,” என்று டிரம்ப் கூறினார்.

“ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், எனக்கு ஏதேனும் நேர்ந்தால், அவர்கள் இதுவரை பார்த்திராத அளவிற்கு மிகக் கொடூரமான முறையில் அவர்கள் மீது குண்டுவீச்சு நடத்துமாறு நான் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளேன்.”

இருப்பினும், இஸ்ரேல் எச்சரித்ததாக வெளியான புதிய செய்திகளை டிரம்ப் மறுத்துள்ளார். ஈரான் தன்னை நீண்ட காலமாகவே கொல்ல நினைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இல்லை, இல்லை. இஸ்ரேல் அப்படி எந்தத் தகவலையும் கொண்டு வரவில்லை,” என்று அவர் கூறினார்.

“நான் நீண்ட காலமாகவே அவர்களின் முதன்மை இலக்காக இருக்கிறேன். வாழ்க்கை அப்படித்தான் நகர்கிறது, உங்களுக்குத் தெரியும்.”

“நீங்கள் என்னை நினைத்துப் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

அமெரிக்கச் சட்டப்படி, அதிபர்கள் தங்களது மரணத்திற்குப் பிறகு செயல்படுத்துவதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது. புதிதாகப் பதவியேற்கும் அடுத்த அதிபர் தனது விருப்பப்படி முடிவெடுக்க முழு சுதந்திரம் கொண்டவர் ஆவார்.

ட்ரம்ப் மரணமடையும் பட்சத்தில், தற்போதைய துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) அதிபராவார். ஆனால், நிர்வாகத்திற்குள் வான்ஸ் ஈரானுடனான போரை தனிப்பட்ட முறையில் எதிர்ப்பவர் என்ற ஒரு பிம்பம் ஏற்கனவே நிலவுகிறது.

ட்ரம்பின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பது, இந்த வார தொடக்கத்தில் அவர் துருக்கியில் இருந்து தாயகம் திரும்பும் வழியில், பயணத்தின் பாதியிலேயே தனது விமானத்தை மாற்றியபோது வெளிச்சத்திற்கு வந்தது.

கட்டார் அரசாங்கத்தால் தனக்கு பரிசாக வழங்கப்பட்ட புதிய Air Force One விமானத்தில் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டிற்கு டிரம்ப் சென்றிருந்தார்.

ஆனால், அவர் ஒரு பழைய விமானத்தில் பிரித்தானியா பறந்து, அங்குள்ள RAF தளத்தில் வைத்து விமானத்தை மாற்றினார்.

‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தியின்படி, அமெரிக்க ரகசிய சேவை அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த விமான மாற்றம் செய்யப்பட்டது.

“ஈரானின் கொலைப் பட்டியலில் நான் தான் முதலிடத்தில் உள்ளேன்,” என்று டிரம்ப் பதிலளித்தார்.

“அவர்களின் ஒவ்வொரு பட்டியலிலும் நான் இருக்கிறேன், இதுவரை நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலியாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியாது, ஏன்னென்றால் அப்படித்தான் நடக்கும்.”

டிரம்பின் புதிய விமானத்தில் முந்தைய விமானத்தைப் போன்ற பாதுகாப்பு வசதிகள் பொருத்தப்படவில்லை என்று கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.

புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்க அதிபர் பதவி என்பது உலகிலேயே மிகவும் ஆபத்தான வேலைகளில் ஒன்றாகும், இதுவரை நான்கு அதிபர்கள் பதவியில் இருக்கும்போதே படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles