இங்கிலாந்து மேயர்கள் தங்கள் பகுதிகளில் வசூலிக்கப்படும் வருமான வரி மற்றும் வணிக வரிகளில் ஒரு பகுதியைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.
பர்ன்ஹாமின் இந்த முயற்சியானது , பிராந்திய ரீதியாக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதையும், வெஸ்ட்மின்ஸ்டரிலிருந்து பிரித்தானியா முழுவதுமுள்ள உள்ளூர் சமூகங்களுக்கு அதிகாரத்தைப் பரவலாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இருப்பினும், தற்போது ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடாளுமன்றங்களின் வசம் உள்ள, மேயர்கள் இந்த திட்டத்தின் ஊடாக தன்னிச்சையாக வரிகளை உயர்த்தும் அதிகாரத்தை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சீர்திருத்தங்களின் விவரங்கள், இந்த இலையுதிர்காலத்தில் நிதி அமைச்சர் ஜான் ஹீலி சமர்ப்பிக்கவுள்ள வரவு – செலவு திட்டத்தில் வெள்ள அறிக்கையாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
