கனடாவின் லாரன்ஷியன்ஸ் பகுதியில் அமைந்துள்ள சாண்டே- லூசி – டெஸ் – லாரன்ஷியட்ஸ் மாகாணத்தின் லான்டியர் நகராட்சியில் வெள்ளிக்கிழமை மதியம் நிகழ்ந்த கொடூரமான நேருக்கு நேர் வாகன விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
க்ளூட்டியர் பவுலவர்டு மற்றும் செமின் டு லாக் டுஃப்ரெஸ்னே சாலைகள் சந்திக்கும் பகுதியில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு வாகனம், தனக்கு முன்னால் வலதுபுறமாக திரும்ப முயன்ற மற்றொரு வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக, இடதுபுறமாக முந்திச் செல்ல முயன்றுள்ளது.
அப்போது எதிர்பாராதவிதமாக, எதிரே தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு வாகனத்தின் மீது அது நேருக்கு நேர் பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில், முந்திச் செல்ல முயன்ற வாகனத்தால் மோதப்பட்ட (எதிரே வந்த) காரில் பயணம் செய்த இரு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை ஆகிய மூன்று பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தவறான முறையில் முந்திச் செல்ல முயன்ற காரின் ஓட்டுநருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன, ஆனால் அவை உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தை அடுத்து, செமின் டி லா மாண்டாக்னே நோயர் பகுதியில் போக்குவரத்து முழுமையாக மூடப்பட்டு, போக்குவரத்து மற்றும் நிலையான நடமாட்டத்திற்கான அமைச்சகத்தால் மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
