2300ஆம் ஆண்டுக்குள் மில்லியன் கணக்கான பிரித்தானியர்களின் வீடுகள் நீரில் மூழ்கக்கூடும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கடல் மட்டம் உயர்வால் 2300ம் ஆண்டுக்குள் 17 லட்சம் பிரித்தானிய மக்களின் வீடுகள் நீரில் மூழ்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் ஐக்கிய இராச்சியத்தின் சில பகுதிகள் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாகிவிடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

வானிலை ஆய்வு மையம் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடலோர வெள்ளப்பெருக்கினால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கணினி மாதிரிகளைப் பயன்படுத்தி ஆராய்ந்தனர்.

இந்த ஆய்வின் முடிவுகளின்படி, 2300ம் ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது ஐம்பது லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்தக் கடுமையான மாற்றங்களைத் தடுக்க, வரும் பத்தாண்டுகளில் பெரிய அளவிலான நடவடிக்கை தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஏனெனில், உலகின் அனைத்து கார்பன் வெளியேற்ற உறுதிமொழிகளும் நிறைவேற்றப்பட்டாலும் கூட, 2200ம் ஆண்டிற்குள் 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளப் பாதிப்பு அபாயத்தில் இருப்பார்கள்.

மேலும் 2300ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை கூடுதலாக அதிகரிக்கும்.

எதிர்காலக் கடலோர வெள்ளப்பெருக்குக்கான முக்கிய இடங்களாக விளங்கும் வாஷ் மற்றும் ஹம்பர் முகத்துவாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த ஆய்வு குறிப்பாகப் பாதகமான செய்தியாக அமையக்கூடும்.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் முதன்மை ஆய்வாளரான பேராசிரியர் மாட் பால்மர், உலகின் பெருங்கடல்களும் பனி மூடிய பகுதிகளும் புவி வெப்பமயமாதலுக்கு மிகவும் மெதுவாகவே எதிர்வினையாற்றுகின்றன என்று கூறுகிறார்.

மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால், காலநிலை வெப்பமடைவதால் கடல் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

உலகளவில், 1999ம் ஆண்டு முதல் சராசரி கடல் மட்டம் ஆண்டுக்கு 3.64 மிமீ உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles