இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்றைய தினம் (27.06) அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளார்.
ஈரானுடனான போர் தொடங்கியதில் இருந்து ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு சந்தித்துக் கொள்வது இதுவே முதல்முறையாகும்.
இதன்போது ஈரான் குறித்து விவாதிக்கப்படவுள்ளதுடன், எங்கள் பாதுகாப்பைப் பாதுகாப்பதும், நம்மைச் சுற்றியுள்ள அமைதி வட்டத்தை விரிவுபடுத்துவதும் எங்கள் இலக்காக இருக்கும் என நெதன்யாகு காணொளி ஒன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதம் இரண்டு வாரங்களாக அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் இஸ்ரேல் பங்கேற்கவில்லை. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கத் தளங்கள் மீது தெஹ்ரான் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
